• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தம்? சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை

September 29, 2018 தண்டோரா குழு

கோவையில் கனரா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் உள்ள கனரா வங்கியின் அருகிலேயே அந்த வங்கிக்கான ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த போது, ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டு சொருகும் பகுதி வித்தியாசமாக இருந்ததால் உடனடியாக கனரா வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கனரா வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து ஆய்வு செய்த போது, வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடுவதற்காக வைக்கப்படும் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர், வங்கி அதிகாரிகள் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க