• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மர்ம சாவு

February 3, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியை சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (48). திருமணம் செய்யாமல் தனிமையில் வசித்து வந்தார்.‌இவர் தியாகி குமரன் வீதியில் வெள்ளி பொருட்கள் பாலிஷ் கடை நடத்தினார்.‌

உரிய வாடகை தர முடியாத நிலைமையில் இவரது கடையை மூன்று மாதம் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் விரக்தியில் காணப்பட்ட இவர் அடிக்கடி மது போதையில் கடை மூடியதால் வேலை இழந்துவிட்டதாக நண்பர்களிடம் புலம்பி வந்தார்.

நேற்று இவர் தனது கடைமுன் இறந்து கிடந்தார்.‌ இறப்பிற்கான காரணம் குறித்து பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க