• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் பகுதியில் போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது

December 16, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் போதை மாத்திரை விற்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா போதை ஊசி போதை மாத்திரைகள் உள்ளிட்டவை புழக்கத்தில் விடும் நபர்களை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கைது செய்து வருகின்றனர்.

இருந்தபோதும் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை பெரியகடை வீதி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஆசீர்வாதம் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர்.

அவரிடம் 45 நைட்ராசிபம் போதை மாத்திரைகள், டைடால 20 மாத்திரைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மாத்திரைகளை வலி நிவாரணியாக மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலம் உடலில் செலுத்தி சில வாலிபர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

இந்த மாத்திரையை மறைத்து வைத்து இளைஞர்களுக்கு விற்பதற்காக வைத்திருந்த நபரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை கோட்டைமேடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் பரூக் என்பது தெரியவந்தது.தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க