December 11, 2019
கோவை உக்கடத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் முகமது வாசிக். இவர் தனது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவே, பெற்றோர் உடனடியாக ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல் துறையினர் முகமது வாசிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.