• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மூன்று ஸ்டரக்சர்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்

June 16, 2021 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தேவையான மூன்று ஸ்டரக்சர்களை கோவை தெற்கு தொகுதி மற்றும் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

கோவை சிங்காநல்லூரில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை பிரத்யேகமாக கொரோனோ தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.கடந்த சில வாரங்களாக கோவையில் உயர்ந்து வந்த கொரோனோ இரண்டாம் அலையின் வேகம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், நிரம்பி வழிந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு வந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் மூன்று ஸ்டர்க்சர்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அணிவதற்கு தேவையான பாதுகாப்பு உடைகளை மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் வழங்கினர்.

தொடர்ந்து மருத்துவமனையை பார்வையிட்ட வானதி சீனிவாசன் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க