• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இருகூரில் சாக்கடை நீர் கால்வாய் இல்லாமல் மக்கள் மக்கள் அவதி ஆட்சியரிடம் புகார்.

November 20, 2017 தண்டோரா குழு

கோவை இருகூர் கிராமம் குரும்பபாளையத்தில் சாக்கடை நீர் செல்ல கால்வாய் இல்லாமல் தேங்கி நிற்பதாகவும், இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக கூறி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மனோரஞ்சிதம் கூறுகையில்,

சாக்கடை நீர் தேங்கி நிற்பது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பல முறை நான் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஏழை குடும்பத்தை சார்ந்தவள். நான் கீழ் சாதி என்பதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது சம்பந்தமாக யாரிடம் முறையிடுவது என்பது தெரியாமல் தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு மனு அனுப்பியுள்ளேன்.மேலும் இதுசம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.இந்த மனு மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க