• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் NIA விசாரணையை தொடங்கியது

February 2, 2018 தண்டோரா குழு

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை குறித்து, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகாமை புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த 2016 செப்டம்பர் மாதம்கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய கோவை போலீசார், குற்றவாளிகளை கைது செய்யாத நிலையில், அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக சதாம் உசேன், சுபைர், முபாரக், சையது அபுதாகிர் ஆகிய 4 பேரை கைது செய்தது. விசாரணையில் இவர்களுக்கு  அமைப்பு ரீதியான தொடர்புகள் இருப்பதாக தெரியவந்ததால் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை சென்று தகவல்களைப் பெற்று ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்து சசிகுமார் கொலை வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், சென்னை – பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க