January 14, 2020
கோவையில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கள் வைத்து, ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இந்த விழாவில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை துவைக்கிவைத்தார்.
தை 1ந் தேதி தமிழர்களின் முதன்மை விழாவான பொங்கல் விழாவை உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் அன்று விடுமுறை தினம் என்பதால் பள்ளிகளில் முன்னதாகவே பொங்கல் விழாவை கொண்டாடுவது வழக்கமாகும்.
அந்த வகையில் கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமத்துவம் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து பொங்கலை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த விழாவில் சமூக வேறுபாடுகளை கலைந்து மாணவர்கள் அனைவரும் தமிழர் திருநாளை பாரம்பரியம் மாறாமல் மகிச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவை பள்ளியின் நிர்வாகி கௌரி மற்றும் கௌரி உதயேந்திரன் ஆகியோர் முன்னின்று நடத்தினார். இவர்களுடன் பள்ளியின் நிர்வாகி விப்ரஜா, தலைமை ஆசிரியை சரன்யா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.