• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கல்

June 28, 2021 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில்
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

கோவை மாநகர் பகுதிகளில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது இதையடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும் என அரசு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கோவை மாவட்டத்திலுள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021 – 2022 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இன்று முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களை அன்றைய தினமே இணையதளத்தின் மூலம் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் இப் பணிகளை துவங்க பள்ளிகளும் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் செய்ய வேண்டும் மேலும் தகுதியான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க