• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறக்க கோரிக்கை

April 21, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட பால் உற்பத்தி மற்றும் கூட்டுறவு சங்க அலுவலகம் மூலமாக தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் உடன் காலாண்டு கூட்டம் ஆர்.எஸ்.புரத்திலுள்ள விற்பனை மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் பொது மேலாளர் ராமநாதன் மற்றும் விற்பனை மேலாளர் நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறியதாவது:

கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகம் திறக்க வேண்டும். அனைத்து அரசு துறை கட்டிடங்கள், மாநகராட்சி மற்றும் உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிறுத்தங்களில் ஆவின் பாலகம் திறக்க வேண்டும். மேலும் கோவையில் ஆவின் பால் விலை கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க