• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

February 18, 2020 தண்டோரா குழு

வேலையின்மை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – போலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளுவினால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வேலையின்மைக்கு எதிராக பேரணியில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தினால் போலிசாருக்கும் மாண்வர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் டி.என்.பி.எஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை சி.பி.ஐ விசாரணை வேண்டியும், வேலையின்மைக்கு எதிராகவும், புதிய வேலை வாய்புகளை உருவாக்கவும், அரசு காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டியும், படிப்புக்கு ஏற்ற வேலைவாய்பினை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்னிறுத்தி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முற்றுகையில் ஈடுப்பட்ட 41 பேர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு போலிசார் அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க