• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அவினாசி சாலையில் ஓடும் காரில் தீ விபத்து

February 1, 2018 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில் ஓடும் காரில் தீ பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீ கேஸ், என்பவர் தனது, டொயோட்டோ எம்.ஆர்.2 ஸ்போர்ட்ஸ் காரில் அவினாசி சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அண்ணா சிலை அருகே கார் வந்துகொண்டிருந்த போது, காரின் பின் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கார் ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக கார் நிறுதப்பட்டு ,காரில் வந்தவர்கள் வெளியேறியதால் அதிர்ஸ்டவசமாக  காரில் பயணம் செய்த இருவரும் உயிர் தப்பினர். காரில் பிடித்த தீ மல மலவென பரவியதால் காரின் பின் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனையப்பு துறையினர் தீயை அணைத்தனர். காரில் பெட்ரோல் கசிவினால் தீ விபத்து ஏற்பாட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். அவினாசி சாலையில் , பெட்ரோல் பங்க் அருகே காரில் தீ விபத்த ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க