• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அழைத்து வந்த கைது தப்பி ஓட்டம்

November 5, 2019 தண்டோரா குழு

கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விட்டு கேராளாவிற்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடிய குற்றவாளியை கேரள போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் பெரும்பாவூர், ஆலப்புழா மாவட்டம், காயன்குளம் அருகே உள்ள தேசத்தினகம் பகுதியை சேர்ந்தவர் அப்புண்ணி (வயது 35). இவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இவர் காயன்குளம், வளஞ்சநடா,செட்டிகுளங்கரா ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கூலிப்படைகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்று கூறப்படுகிறது. இவர் மீது ஆலப்புழா,கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில்,திருக்குன்னபுழா பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கில் இவரை கைது செய்த கேரள போலீஸார் மாவேலிக்கரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து விட்டு மீண்டும் கேரளாவுக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் மாவேலிக்கராவிற்கு ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் சென்றஅப்புகண்ணி, நீதிமன்றத்துக்கு அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு விட்டு கை கழுவ செல்வதாக சென்ற அப்புண்ணி கண் இமைக்கும் நேரத்தில் ஓட்டலில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆயுதப்படை போலீசார் இதுகுறித்து மாவேலிக்கரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவேலிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அப்புண்ணியை வலைவீசி தேடி வருகின்றனர்

மேலும் படிக்க