• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே கிராம சபா கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் வர தாமதம் ஏற்பட்டதால் ஐந்து கல் ஆட்டம் ஆடியபடி பொதுமக்கள்

January 26, 2018 தண்டோரா குழு

கோவை அருகே கிராம சபா கூட்டத்திற்கு அரசு அதிகாரிகள் வர கால தாமதம் ஏற்பட்டதால், ஐந்து கல் ஆட்டம் ஆடியபடி பொதுமக்கள் காத்திருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அசோகபுரம் ஊராட்சி. இங்கு இன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் காலை 11 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டத்தில், அக்கிராமத்தில் உள்ள சாக்கடை, குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க கிராம மக்கள் கூடியிருந்தனர்.

ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல மணி நேரமாகியும் கூட்டத்திற்கு வரவில்லை. அதிகாரிகளுக்காக காத்திருந்த கிராம மக்கள் சிலர் பொழுதை போக்க ஐந்து கல் ஆட்டம் ஆடினர். தொடர்ந்து அதிகாரிகள் வர தாமதம் ஏற்பட்டதால், கிராம மக்கள் அக்கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். அதிகாரிகளின் இச்செயல் அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க