• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர்

June 14, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு, குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறது. அதன் ஒரு நிகழ்வாக கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு ஆய்வு மேற்கொண்ட பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை குழந்தைகள் வார்டு, MRI ஸ்கேன் ஆய்வகம், உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்யுமாறு மருத்துவமனை முதல்வரிடம் தெரிவித்தார். மேலும் அங்குள்ள நோயாளிகளிடமும் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2018ம் ஆண்டு தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸஸ் கார்ப்பரேசனால் வழங்கப்பட்ட MRI கருவியை 90 நாட்களுக்குள் பொருத்தவில்லை என்று பரிந்துரைத்ததையடுத்து அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை சரியான நேரத்தில் தான் பதிவு செய்திருக்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து நாளை நடைபெறும் குழுவில் முடிவு செய்ய உள்ளோம். கோவை அரசு மருத்துவமனை பல்வேறு வேலைகள் பராமரிக்கப்பட வேண்டியுள்ளது, அதற்காக இவர்கள் கேட்கும் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி தர வேண்டும். இந்த கோவை அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி இன்னும் தரம் உயர்த்தி அடிப்படை ஆதாரங்களை செய்து தர வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என பொது கணக்கு குழு மூலமாக பரிந்துரைத்துள்ளோம் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது குழுவின் உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, சட்டப்பேரவை இணை செயலாளர் தேன்மொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க