• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

March 24, 2022 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து இன்று உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கொடியசைத்து துவக்கி வைத்தார்.அரசு மருத்துவமனையில் துவங்கிய இந்த பேரணியானது கலைக்கல்லூரி வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

இந்தப் பேரணியில் காச நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறித்தான பதாகைகளை ஏந்தியவாறு சுமார் 100க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்ட காசநோய் மைய அலுவலர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வினையொட்டி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் தின விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

மேலும் படிக்க