• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கவனிக்க 20 புதிய செக்யூரிட்டிகள் நியமனம்

May 15, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில்,நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க, புதிதாக 20 செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில், தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, கொரோனா பாதிப்புடன் சுமார், 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, குறைவான டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் இருப்பதால், சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது.

மருத்துவமனை வளாகத்தில் தினமும், நோயாளிகள் மற்றும் உறவினர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால், கூட்டத்தை சமாளிக்க முடியாமல், செக்யூரிட்டிகள் திணறி வந்தனர்.இந்நிலையில், கோவை பில்டர்ஸ் கான்ட்ராக்ட் அசோசியேஷன் (சிபாகா) சார்பில் மருத்துவமனைக்கு, 20 செக்யூரிட்டிகளை வழங்கியுள்ளனர்.

மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,

”மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், இது போன்ற உதவி, ஊக்கம் அளிக்க கூடியதாக உள்ளது. தற்போது, பணியமர்த்தப்பட்டுள்ள செக்யூரிட்டிகள், மருத்துவமனையில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பது, பொதுமக்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர்,” என்றார்.

மேலும் படிக்க