• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன்

February 20, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றரை கோடி மதிப்பில் புதிய சி டி ஸ்கேன் வசதியை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் இன்று(பிப் 20) திறந்து வைத்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை ஒரு சி டி ஸ்கேன் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் புதியதாக சி டி ஸ்கேன் வாங்குவதற்காக தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று புதியதாக சி டி ஸ்கேன் வசதியை அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த புதிய  சி டி ஸ்கேன் அதி நவீன தற்போதைய புதிய தொழில் நுட்பங்களுடன் ஒன்றரை கோடி மதிப்பில் நிறுவப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருந்த பழைய சி டி ஸ்கேனும் புதியதாக மாற்றப்பட்டது.இதனால் வழக்கமாக நூறு பேருக்கு ஸ்கேன் செய்யும் வசதி இருந்த நிலையில் , தற்போது 200 பேருக்கு ஸ்கேன் வசதி செய்து தர முடியும் என மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க