• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

January 29, 2021 தண்டோரா குழு

மத்திய அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வழங்க கோரி கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று காலை கருப்பு பேட்ஜ் அணிந்து, ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு மருத்துவமனை செவிலியர் சங்கம் சார்பில் இந்த போராட்டமானது நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இணையான சம்பளத்தை , மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கொரொனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு வழங்குவதாக கூறிய ஒரு மாத சிறப்பு ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், அதை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் கொரொனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படவேண்டும், செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவேண்டும், அரசு மருத்துவமனைகளில் போதுமான செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க