• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவகல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு

May 30, 2018 தண்டோரா குழு

கோவையில் வருமானத்திற்கு அதிகமாக 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை பேராசிரியர் இளங்கோ,மற்றும் அவரது மனைவி பொறியாளர் மல்லிகா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ.இவரது மனைவி மல்லிகா தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

பேராசிரியர் இளங்கோ கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தபடி,குனியமுத்தூர் பகுதியில் மல்லிகா நர்சிங் ஹோம் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றும் நடத்தி வருகின்றார்.அரசு ஊழியர்களான இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து 2013 ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 90,51,269 ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பது லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரியவந்தது.இதில் வருவாயை விட அதிகமாக இருந்த 90 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கியதற்கான வரவு குறித்த எந்த ஆவணங்களும் இவர்களிடத்தில் இல்லை.

இதனையடுத்து பேராசிரியர் இளங்கோ,அவரது மனைவி மல்லிகா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க