• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 90 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் விநியோகம்

May 20, 2021 தண்டோரா குழு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணி கடந்த 15-ம் தேதி துவங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் தற்போது 90 சதவீத பேருக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் குடும்பஅட்டைகள் உள்ளன. இதில் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் 52 ஆயிரம் குடும்பஅட்டைகள் உள்பட 9 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி பெற தகுதி உடையவர்கள்.இவர்களுக்கு கடந்த 15-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 90 சதவீதம் பேருக்கு 90 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க