• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 90 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் விநியோகம்

May 20, 2021 தண்டோரா குழு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணி கடந்த 15-ம் தேதி துவங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் தற்போது 90 சதவீத பேருக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் குடும்பஅட்டைகள் உள்ளன. இதில் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் 52 ஆயிரம் குடும்பஅட்டைகள் உள்பட 9 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி பெற தகுதி உடையவர்கள்.இவர்களுக்கு கடந்த 15-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 90 சதவீதம் பேருக்கு 90 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க