• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கர்ப்பம் – சித்தப்பா கைது….!

July 28, 2022 தண்டோரா குழு

கோவையில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இதனையடுத்து அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர்.அப்போது சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்த பொழுது சிறுமியின் சித்தப்பா பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனால் இந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் சித்தப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தொண்டாமுத்தூர் விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை சித்தப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க