May 26, 2018
தண்டோரா குழு
கோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த ராஜ வீதியில் நேற்று சட்ட விரோதமாக குட்கா கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சோதனை நடத்திய போது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா வாகனத்தில் இருந்தது.பின்னர் அவர்களிடம் இருந்து 840 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனையின் போது குட்கா கடத்தி வரப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த ஒட்டுநர் தப்பி ஓடினார்.பின்னர் ராஜஸ்தானை சேர்ந்த உரிமையாளரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.