• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 840 கிலோ குட்கா பறிமுதல்

May 25, 2018 தண்டோரா குழு

கோவையில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த ராஜ வீதி பகுதியில் சட்ட விரோதமாக குட்கா கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து இன்று காலை சோதனை நடத்திய போது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா வாகனத்தில் இருந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்து 840 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சோதனையின் போது குட்கா கடத்தி வரப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த ஒட்டுநர் தப்பி ஓடினார்.பின்னர் ராஜஸ்தானை சேர்ந்த உரிமையாளரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.தொடர்ந்து அவ்வப்பொழுது இந்த பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதால் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க