• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 7 பேர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

June 12, 2019 தண்டோரா குழு

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் 7 பேர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் இவர்களுக்கு கோவையை சேர்ந்த சிலருக்கு சமூகவலைதளங்களில் தொடர்பு இருப்பது தேசியபாதுகாப்பு முகமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.இதனைதொடர்ந்து கோவை உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 6 மணி முதல் இந்த சோதனையானது துவங்கி நடந்து வருகின்றது.கொச்சியில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை டி.எஸ்.பி விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் , கோவையில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை போத்தனூரில் உள்ள சதாம், அக்பர், அக்ரம்ஜிந்தா ஆகியோர் வீடுகளிலும், உக்கடம் அன்புநகர் பகுதியில் உள்ள அசாருதீன், குனியமுத்தூர் அபிபக்கர்சித்தக் ஆகியோர் வீடுகளிலும், அல்அமீன்காலனியை சேர்ந்த இதயதுல்லா, சாகிம்ஷா ஆகிய 7 பேர் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக கோவை மாநகர காவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க