• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 6 வயது சிறுவன் மர்ம மான முறையில் உயிரிழப்பு – பெற்றோரிடம் விசாரணை

April 19, 2020 தண்டோரா குழு

கோவையில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் திவ்யா.இவருக்கு 6 வயதில் அபிஷேக் என்ற மகனும்,3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முதல் கணவரான அருண்னை பிரிந்து திவ்யா, கார் ஒட்டுநரான ராஜதுரை என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அபிஷேக்கிற்கு உடல் நிலை சரியில்லை என ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அபிஷேக்கின் உடல் முழுக்க காயங்கள் இருந்த நிலையில் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அபிஷேக்கின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக சாய்பாபா காலணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறும்பு செய்த சிறுவனை அடித்ததினால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ராஜதுரை மற்றும் திவ்யா ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க