• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 537 வீடுகள்அகற்றப்பட்டன

September 12, 2017 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 537 வீடுகள் இன்று அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திலுள்ள,ஆத்துப்பாலம், அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்கு அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்குகரை பகுதிகளில் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் காவல்துறை ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.

இப்பகுதிகளில் சுமார் 75 ஆண்டுகளாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 537 வீடுகள் இன்று அகற்றப்பட்டன.இதில் அணைமேடு ஒன்றில் 71 வீடுகள் அணைமேடு இரண்டில்– 276 வீடுகள், துர்கா காலனி 7 வீடுகள்,அண்ணா காலனி 56 வீடுகள், முத்து காலனி 64 வீடுகள், சேரன் நகர் 53 வீடுகள் அகற்றப்பட்டன.

மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வெள்ளலூர் பகுதியில் குடியிருப்பு வீடுகள் ஒதுக்க உத்தரவு வழங்கி ஒருமாத கால அவகாசம் கொடுத்தும், காலி செய்யாததால் இன்று அனைத்து வீடுகளும் அகற்றப்பட்டன.

மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவதன் மூலம் அணைமேடு பகுதியில் இருந்து வெள்ளலூர் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் மூலம் மழை நீர் தடையின்றி சென்று ஏரி நிரம்புவதற்கு வழிவகை ஏற்படும்.

மேலும், அணைமேடு பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவும், முத்துகாலனி சேரன் நகர்,அண்ணா காலனி, உக்கடம் பெரியகுளம் தெற்கு கரை பகுதிகளில் 3 ஏக்கர் பரப்பளவு,ஆகமொத்தம் 7 ஏக்கர் பரப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த நடவடிக்கையின் மூலம் 18 இடங்களில் மொத்தம் 1415 ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படவுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் இணைப்பு மற்றும் சுற்றுப்புற அபிவிருத்தி பணியின் முதற்கட்டபணி மாநகராட்சி சார்பாக களத்தில் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க