• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 5300க்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் – மாவட்ட ஆட்சியர்

January 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 5300க்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 9800 படுக்கை வசதிகள் கொரோனா நோய் தொற்றிற்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன.

இதில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 4300க்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5300க்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளும், 129 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்கலன், 31 ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகாரணங்களும் சரியான நிலையில் இயங்குவதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும். 24 நான்கு மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றிடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கோவை மண்டலத்தில் உள்ள அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் குணமடைந்தோர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தினசரி அறிக்கையினை அரசு மருத்துவமனை டீன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) அருணா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தொற்று கட்டளை மையத்தில் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க