• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 5 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

March 18, 2020

கோவையில் 5 வயது சிறுவனுக்கு ஜெம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குழு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிறந்ததிலிருந்தே கல்லீரல் கொலஸ்டாசிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன், ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சையில் குணமான நிலையில், பின்னர் உடல்நிலை மோசமடைந்து மருத்துவ சிகிச்சைகளும் தோல்வியுற்றது, தொடர்ந்து சிறுவனைக் காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் தாயின் கல்லீரலின் ஒரு பகுதி லாபாஸ்கோபிக் முறை மூலம் எடுக்கப்பட்டு டாக்டர் சுவாமிநாதன், ஆனந்த் வியாஜி, விக்னேஷ், பிரபாகரன் ஆகிய மருத்துவர் குழு , தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5 வயது சிறுவனக்கு மாற்றுஅறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு சாதனையை படைத்தனர்.

ஐந்து வயது சிறுவனக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த கல்லீரல் நிபுணர்க்கு ஜெம் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க