• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் !

September 22, 2022 தண்டோரா குழு

கோவையில் பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு 5 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வருகிறது. கோவையிலும் கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது.குறிப்பாக குழந்தைகளிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.எனவே குழந்தைகளிடையே லேசான காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் காணப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுகொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க