• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 355 இடங்களில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கும் பணி

June 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகளில் 5 லட்சம் வீடுகள் உள்ளன. 6 ஆயிரம் வீதிகள் உள்ளன. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூர சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.

மேற்கண்ட பணிகள் காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் சாலை குழிகளில் இருசக்கர வாகனங்கள் ஏறி, இறங்கும்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

இந்த சாலைகளை சீரமைப்பதற்காக கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. பின்னர் நிதிபற்றாக்குறையை காரணம் காட்டி சாலை சீரமைப்பு பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க ரூ.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பாதாள சாக்கடை பணிகள், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளுக்கு குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டதால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.93 கோடி நிதிஒதுக்கப்பட்டு 355 இடங்களில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முத்தண்ணன் குளம், ரேஸ்கோர்ஸ், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள சாலைகளும் விரைவாக சீரமைக்கப்படும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக சாலை சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க