• Download mobile app
30 Jul 2025, WednesdayEdition - 3458
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை வட்டாட்சியர் கையெகபடுத்த முயற்சி

October 1, 2022 தண்டோரா குழு

கோவையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை வட்டாட்சியர் கையெகபடுத்த முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை அடுத்த மயிலேறியம்பளையத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் உள்ளது.இதனை சுற்றி கோவிலுக்கு சொந்தமான பட்டாவுடன் கூடிய இடமும் உள்ளது.இந்த கோவிலை அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்களது காவல் தெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு திடீரென வந்த வட்டாட்சியர் கோவிலை மட்டும் விட்டுவிட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தை கையேகபடுத்த முற்பட்டு நோட்டிஸ் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலின் முன்பு திரண்டனர்.இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி தலைவர், கவுன்சிலர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரும் காந்திஜெயந்தி அன்று நடைபெற இருக்க கூடிய கிராமசபை கூட்டத்தில் கோவில் நிலம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதன் பின் பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். பழைமையான கோவிலுக்கு சொந்தமான இடங்களை பல நூறு ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென கையேகபடுத்த முற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க