• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்

August 13, 2018

கோவைசரவணம்பட்டியில் 3 மாத பெண் குழந்தையை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக், வனிதா தம்பதியினரின் 3 மாத குழந்தை கவிஸ்ரீ. இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என கார்த்திக் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர தேடுதல் விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது வீட்டிலிருந்து 250 அடி தூரத்தில் துணியால் சுற்றப்பட்டு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் இருந்து குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையை தாயே கொன்றது அம்பலமானது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால் 2வதும் பெண் குழந்தை பிறந்ததாக குழந்தை கவிஸ்ரீயை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க