• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 3 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்

August 13, 2018

கோவைசரவணம்பட்டியில் 3 மாத பெண் குழந்தையை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக், வனிதா தம்பதியினரின் 3 மாத குழந்தை கவிஸ்ரீ. இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என கார்த்திக் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர தேடுதல் விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது வீட்டிலிருந்து 250 அடி தூரத்தில் துணியால் சுற்றப்பட்டு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் இருந்து குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையை தாயே கொன்றது அம்பலமானது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால் 2வதும் பெண் குழந்தை பிறந்ததாக குழந்தை கவிஸ்ரீயை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க