December 27, 2019
குடிஉரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததும். 3ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பள்ளிவாசல் முன்பாக மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்தபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்த சட்டத்திற்க்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினார்கள். இதனால் குணியமுத்தூர் பாலக்காடு சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்படைந்து. மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட குணியமுத்தூர் பள்ளிவாசல் இமாம் மாலிக் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது.
இந்த சட்டம் இஸ்லாமிரகளுக்கு மட்டும் இன்றி இந்தியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டம். ஆகவே இந்த சட்டத்தை திரும்பப்பெறும் வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார். மேலும் இந்த சட்டத்திற்க்கு ஆதரவாக செயல்படும் இஸ்லாமியர்கள் இந்தசட்டத்தை பற்றிய அறியாமையினால் ஆதரவாக செயல்படுவதாக கூறினார்.