• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 2300 கிலோ ரேஷன் பறிமுதல் – ஒருவர் கைது

February 20, 2021 தண்டோரா குழு

கோவையில் 2300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அருள்பிரகாஷ் ஆகியோர்கள் கோவை to பாலக்காடு ரோடு JS அக்ரோ கம்பெனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியே வந்த பொலிரோ பிக்அப் வேன் மற்றும் அசோக் லைலாண்ட் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 56 ரேஷன் அரிசி மூட்டைகள்
இருந்தது தெரியவந்தது.

ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 50 கிலோ ரேஷன் அரிசி அடங்கிய சுமார் 2300 கிலோ ரேசன் அரிசியை கைப்பற்றி திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை விசாரணை செய்ததில் தானும் தப்பியோடிய தங்கபாண்டியும் கேரளா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவது விசாரணையில் தெரிய வந்தது.எனவே மேல் நடவடிக்கைக்காக மேற்படி அரிசி மூட்டைகள் மற்றும் எதிரியையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க