• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 2 மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

April 16, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இரு பயிற்சி மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையை பொறுத்த வரையில் இந்த வைரஸினால் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இரண்டு பயிற்சி மருத்துவர்களும் அடங்குவர். இவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இந்த பயிற்சி மருத்துவர்கள் தொடர்பு கொண்ட இடங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிஆர்ஆர்ஐ குவாட்டர்ஸில் இருக்கும் 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யாருக்கும் தொற்று இல்லையென தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் மற்ற மாணவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க