• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2 மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

April 16, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட இரு பயிற்சி மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையை பொறுத்த வரையில் இந்த வைரஸினால் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இரண்டு பயிற்சி மருத்துவர்களும் அடங்குவர். இவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இந்த பயிற்சி மருத்துவர்கள் தொடர்பு கொண்ட இடங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிஆர்ஆர்ஐ குவாட்டர்ஸில் இருக்கும் 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யாருக்கும் தொற்று இல்லையென தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் மற்ற மாணவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க