• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2வது நாளாக 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தம்

December 17, 2020 தண்டோரா குழு

மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறுகையில்,

“கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் இரண்டாவது நாளாக இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.30 கோடி உற்பத்தி வீதம் ரூ.60 கோடி உற்பத்தி இழப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் முற்றிலும் பவுண்டரி தொழிற்கூடங்கள் முடங்கியுள்ளன. மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வரை போராட்டம் தொடரும்,” என்றார்

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி பாதித்துள்ளனர்.

மேலும் படிக்க