• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 158வது வருமான வரி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம்

July 25, 2018

158 வது வருமான வரி தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் திரளான தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.

கடந்த 1860 ஆண்டு ஜூலை 24 ம் தேதி ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியாவில் வருமான வரி செலுத்தும் முறை சர் ஜோம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும் வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் வருமான வரி தினம் என இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 158வது வருமான வரி தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய கோவை மண்டல தலைமை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணகுமார்,சுதந்திரத்தின் போது 50 கோடியாக இருந்த வருமான வரி தற்போது லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக கூறினார்.

மேலும் கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் 27 சதவீதம் அளவிற்கு வருமான வரி அதிகரித்து உள்ளதாக கூறிய அவர் இருப்பினும் முழு கணிணிமயமாக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தும் முறை குறித்து போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள்,வருமான வரித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க