• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 120 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்

January 2, 2020

கோவையில் 120 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் விழுந்த மாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டெடுத்தனர்.

கோவை அடுத்த கீரணத்தம், ராயர் கோவில் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது மாட்டை மேய்சலுக்காக வீட்டிலிருந்து வெளியே கட்டி வைத்துள்ளார். அப்போது தெருவில் இருந்த நாய், மாட்டை துரத்தியதாக தெரிகிறது.வேகமாக ஒடிய மாடு பக்கத்து தோட்டத்தில் உள்ள 120 அடி கிணற்றில் விழுந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, கணபதி பகுதி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி மாட்டை மீட்க போராட்டினர். அப்போது மாடு பயத்தில் மிரண்டதால் வெளியே எடுக்க முடியாமல் சிரமத்திற்குள்ளானது.

இதை தொடர்ந்து கிரைன் வரவழைத்து மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

மேலும் படிக்க