• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் – வழக்கறிஞர் போக்சோ சட்டத்தில் கைது

December 9, 2019 தண்டோரா குழு

கோவையில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கறிஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை பி.என். புதூரைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவரது மகன் சங்கரநாராயணன்(42). வழக்கறிஞரான இவர் கடந்த 2012-2017 வரை வெளிநாடுகளில் பணியாற்றி வந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் மகள் கனடாவில் விபத்தில் இறந்து விட்டதால் நாடு திரும்பிய இவர் அதன் பிறகு தனது சொந்த ஊரான பி.என் புதூரில் வசித்து வருகிறார்.

மனைவி மற்றும் மகள் இறந்த சோகத்தில் இருந்த சங்கரநாராயணன், கோவை ஆர்எஸ் புரம் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் பாடம் நடத்திவருகிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்தினம் பிரிவைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஆய்வாளர் முத்துமணி சங்கரநாராயணை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க