• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

February 6, 2021 தண்டோரா குழு

கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி 10 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 32 மற்றும் 37-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 5 கோடி மதிப்பில் கொடிசியா சாலை, அவினாசி சாலை முதல், எஸ் பெண்ட் சாலை வரை மற்றும் குமுதம் நகர் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கும், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 5 கோடி திட்ட மதிப்பில் விளாங்குறிச்சி சாலை, மகேஸ்வரி நகர் முதல் மாநகராட்சி எல்லை வரை, மற்றும் சேரன்மாநகர் பிரதான சாலையில் தார்சாலைகளை புதுப்பிக்கும் பணி களையும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் உட்பட துறை சார்ந்த அரசு அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டார்கள்.

மேலும் படிக்க