• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஹோலி பண்டிகையை உற்சாக கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்

March 18, 2022 தண்டோரா குழு

கோவையில் வடமாநிலத்தவர்கள் உற்சாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமி நாள் அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வடமாநிலத்தவர்கள் இதனை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

ஹோலி பண்டிகை வண்ணங்களின் விழா என்றும் அன்று மக்கள் ஒருவருக்கு ஒருவா் பல வண்ணப் பொடிகளை பூசி ஒருவருக்கு ஒருவா் மீது வண்ணங்கள் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்வா்.கோவையை பொறுத்தவதை ஆர்.எஸ்.புரம்,பூமார்கெட், சுக்ரவார்பேட்டை, ஒப்பணகார வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு ஹோலி பண்டிகையை முன்னிடு மக்கள் ஒவ்வொர் மீது ஒருவர் வண்ணப்பொடியை வீசி ஹோலி பண்டிக்கையை கொண்டாடி வருகின்றனர்.மேலும், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி ஹோலி வாழ்த்துகளை கூறினர். இதில் கோவையில் உள்ள தமிழ் மக்க்ளும் கலந்து கொண்டு வண்ணப் பொடிகளை வீசி ஹோலியை கொண்டாடினர்.

மேலும் படிக்க