• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் நகரும் புகைபட கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

February 23, 2022 தண்டோரா குழு

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் நினைவுகளை பறைசாற்றும் விதமாக நகரும் புகைபட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் விதமாக நகரும் புகைப்பட கண்காட்சி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பஸ் இன்று கோவை வந்தடைந்தது. இதில் வ.உ.சி.யின் தியாகத்தையும், அவரது தீர வரலாற்றையும் மாணவ- மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள புகைப்படங்கள் இந்த பஸ்சில் வைக்கப்பட்டு உள்ளன.இதனை பார்வையிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் நிறுத்தப்பட்டு இந்த கண்காட்சி பஸ்சை பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் பார்வையிட உள்ளனர்.

மேலும் படிக்க