• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வி கண்காட்சி

April 2, 2022 தண்டோரா குழு

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில விரும்பும் மாணவர்களுக்காக கோவையில் கல்வி கண்காட்சி இன்று நடைபெற்றது.

மிஸ்பா என்ற நிறுவனத்தினர் கோவை அவினாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜண்ட் விடுதியில் இன்று ஒரு நாள் கல்வி கண்காட்சியை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்காக இந்த கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது.பல்வேறு நாடுகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.

கண்காட்சியை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கருணாகரன் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து மிஸ்பா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டென்னிஸ் வசந்தகுமார் கூறுகையில்,

“எங்கள் நிறுவனம் மூலமாக மாணவர்களைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பி வருகிறோம். தற்போது நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சியில் லண்டன், அமெரிக்கா அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, கல்வி கற்க வெளி நாடுகளுக்கு அனுப்புவர். இதற்காக நாங்கள் எந்தவித கட்டணமும் மாணவர்களிடமிருந்து வாங்குவது கிடையாது.மேலும் பியர்சன் நிறுவனத்தின் ‘மீ-ப்ரோ’ என்ற மென்பொருள் மூலம் மாணவர்கள் சர்வதேச தரத்திலான ஆங்கிலப் பயிற்சி பெற முடியும். இதனையும் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.” என்றார்.

மேலும் படிக்க