• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது

August 2, 2018 தண்டோரா குழு

வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் திருப்பூரில் கார்த்திக் – கிருத்திகா தம்பதியினர், கார்த்திக்கின் நண்பர் பிரவீன் மூலம் கருவுற்றிருந்த கிருத்திகாவிற்கு சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட மரூட்டி என்கிற முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதில்,அதிக இரத்தப்போக்கால் தாய் கிருத்திகாவின் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.

இதற்கடையில், மரூட்டி முறையில் வீட்டில் இருந்தபடியே மருந்து மாத்திரை, தடுப்பூசி எதுவும் இன்றி சுகப்பிரசவமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் வருகிற 26ஆம் தேதி நடைபெறும் என கோவைபுதூரில் செயல்பட்டு வரும் நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் குறித்து, இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரத்தை வெளியிட்டது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் அந்நிறுவனத்திடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, நிஷ்டை மையத்தின் உரிமையாளர் ஹீலர் பாஸ்கரிடம் மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணைக்கு ஹீலர் பாஸ்கர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீலர் பாஸ்கர் மற்றும் நிஷ்டை அமைப்பின் மேலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே ஹீலர் பாஸ்கரை, குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்ற முயற்சி என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க