• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

January 16, 2021 தண்டோரா குழு

சரவணம்பட்டி ராகவா நகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் மகன் விக்னேஷ். இவர் தனது மனைவி மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றார். இவர் பொங்கல் பண்டிகையை யொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவுக்காரர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முன் கதவை உடைத்து உள்ளறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 25 பவன் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். காலையில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் முன் கதவு உடைந்து இருப்பதை கண்டு சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்தனர்.

இதையடுத்து,வீட்டின் உரிமையாளர் விக்னேஷ் க்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அவர் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்ததற்கு பின்பு வீட்டிற்குள் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க