December 30, 2019
குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து கோவை திமுக மகளிர் அணியினர் வீடுகளில் நோ சி.ஏ.ஏ என கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
அன்மையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சுண்டப்பாளையம் பகுதியில் திமுக மகளிர் அணியினர் வீடுகளில் நோ சி.ஏ.ஏ என்ற வாசகங்களுடன் கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னையில் இதே போல் வீட்டில் குடியுரிமை சட்டத்தத்திற்கு எதிர்ப்பு தெரிந்து கோலமிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.