• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விற்பனைக்கு வந்த 30 கிலோ எடை கொண்ட ஐந்தரை அடி வஞ்சரம் மீன் !

February 20, 2021 தண்டோரா குழு

கோவை வடவள்ளியில் உள்ள சில்லறை விற்பனை மீன் கடையில் இன்று 30 கிலோ எடை கொண்ட ஐந்தரை அடி வஞ்சரம் மீன் விற்பனைக்கு வந்தது.

கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் மீன் விற்பனை கடையில் 30 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன் வரத்தாகியிருந்தது. வழக்கமாக 18 கிலோ வரை ஒரே மீனாக வர்த்து வந்துள்ளதாக தெரிவித்த அந்த மீன் கடைகாரர் 30 கிலோ வஞ்சரம் மீன் வரத்தாகியிருப்பது இதுவே எங்கள் கடையில் முதல் முறை என்றார்.

மிகப்பெரிய மீனை காண அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வருகை புரிந்த நிலையில் ,அந்த மீனை ஒரு வாடிக்கையாளர் ஆர்வமுடன் வாங்கி சென்றார். மொத்த மீனையும் வாங்கினால் கிலோ 550 க்கு விற்பனை செய்வோம் என கடைக்காரர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க