• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த நபர் கைது

July 3, 2018 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தின் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் இருந்து வந்த பயணிகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற பயணி கொண்டு வந்த உருளை வடிவில் உலோகம் ஓன்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.கைப்பற்றப்பட்ட அந்த உலகத்தை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமல்ராஜை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் அந்த உருளையை ஆய்வு செய்த போது,உருளையின் உட்பகுதியில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அமல்ராஜை கைது செய்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும்,கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 15 லட்சம் ருபாய் எனவும்,இது 3.6 கிலோ எடையில் இருந்ததாகவும் வருவாய் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க