• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விபத்து வழக்கில் இழப்பீடு தொகை வழங்காத தனியார் பேருந்து ஜப்தி

January 31, 2020

கோவையில் விபத்து வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 75 இலட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மகள் கீதாஞ்சலி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம் காந்திபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கீதாஞ்சலி மீது, எஸ் 16 என்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதிலா கீதாஞ்சலியின் இடது கை சேதமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து இழப்பீடு கேட்டு, ஜனார்த்தனன் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் வட்டியுடன் 75 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இழப்பீடு வழங்காததால் ஜனார்த்தனன், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதில் இழப்பீடு வழங்ககாததால் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் கோவை ரயில் நிலையம் பகுதிக்கு வந்த போது, அப்பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

மேலும் படிக்க